பூர்வ புண்ணிய ஸ்தானம்

பூர்வ புண்ணிய ஸ்தானம் :

ஜோதிட சாஸ்திரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குறிப்பிடும் பாவகம் ஐந்தாம் பாவகம் ஆகும்.பதிவு நீளமாகத்தான் இருக்கும்.சுருங்கச்சொல்ல முயற்சிக்கிறேன் நண்பர்களே.பொறுமையாக இறுதிவரை பதிவை வாசியுங்கள் .
வாழ்வில் சோகமும் சந்தோஷமும் நிலையாய் இருப்பதில்லை. சமய சந்தர்ப்பங்களில் தடுமாறி விழ நேர்ந்தாலும், நம்மை தூக்கி நிறுத்த தோள் கொடுக்க சொந்த பந்தங்கள் இருப்பது அவசியம். நல்ல தாய் தந்தையர் அமைவது என்பது கூட குழந்தைகள் செய்த வரமாக இருக்கும். வாழுகின்ற மக்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை தான் பாடம். நம் பிள்ளைகளுக்கு சொத்து, சுகங்கள் சேர்த்து வைப்பது மட்டுமின்றி நாம் செய்யும் புண்ணியங்களும் தான தர்மங்களும் நம் சந்ததியினரை காப்பதாக இருக்க வேண்டும்.
ஜென்ம லக்னத்திற்கு பஞ்சம் ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 5ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும். 5ஆம் வீடானது புத்திரன், புத்திரி, பூர்வீகம், உயர்கல்வி போன்றவற்றை பற்றி அறிய உதவும். 5ஆம் வீடு பலம் பெற்றிருந்தால் நல்ல புத்திரர்களை பெறும் யோகம், பூர்வீக வழியில் கிடைக்க வேண்டிய லாபங்களை தடையின்றி அடையும் வாய்ப்பு உண்டாகும். 5ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 5ஆம் வீட்டில் குரு, சுக்கிரன், சந்திரன், சூரியன் போன்ற  கிரகங்கள் அமையப் பெற்றருந்தாலும், 5ஆம் வீட்டை சுபர் பார்வை செய்து 5ல் பாவிகள் இல்லாமல் இருந்தாலும் முன்னோர்கள் சேர்ந்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலை முறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும்.
ஒருவரது ஜாதகம் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்தாலும் ஒருவரது பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்க பட்டிருந்தால் புத்திர தோஷம், களத்திர தோஷம், போன்றவை ஏற்பட்டு அவரது வாழ்க்கை சங்கடங்கள் நிறைந்ததாக இருக்கும். முன்னோர்கள் நாகங்களை துன்புறுத்தி இருந்தாலோ, கொன்று இருந்தாலோ, நாகதோஷம் உண்டாகி திருமணத் தடை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, ஏற்படுகிறது. இதற்கு பரிகாரமாக ராகு கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் சற்று குறைந்து நற்பலன்கள் ஏற்படுகின்றது. மற்ற பெண்களின் வாழ்க்கையில் ஏதாவது கெடுதல்களை செய்து இருந்தாலும் அது களத்திர தோஷமாக மாறி திருமணவாழ்க்கை அமையதடை, அப்படி அமைந்தாலும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.
                                   
பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் சனி, ராகு கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5ஆம் அதிபதி நீசம் பெற்றாலும், வக்ரம் பெற்றாலும், பகை பெற்றிருந்தாலும் 5ஆம் அதிபதி சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் கால புருஷப்படி 5ம் வீடான சிம்மத்தில் சனி, ராகு அமைந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்பட்டு பூர்வீக வழியில் ஜாதகருக்கு அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகிறது. பூர்வீக வழியில் அதாவது உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. 5ஆம் வீடு புத்திர ஸ்தானமாகவும் இருப்பதால் தகுந்த காலத்தில் குழந்தை பாக்கியத்தை பெற முடியாத சூழ்நிலை உண்டாகிறது.

பூர்விகம் கெட்டு விட்டது என்றால் என்ன? 

  1. சுய ஜாதகத்தில் பூர்விகம் பாதிப்படைந்து இருந்தால் , ஜாதகர் அந்த வீட்டுக்குண்டான தன்மையை விருத்தி செய்துகொள்ள நிச்சயம் வாய்ப்பு உண்டு.
  2. ஆனால் கெட்டு விட்டது என்றால் ஜாதகரால் ஒன்றும் செய்ய இயலாது  இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தில் இருந்து 100  கிலோமிட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று ஜீவனம் செய்வது சகல முன்னேற்றத்தையும் தரும், வேறு வழியே கிடையாது .இந்த ஜாதகர் இதை தவிர்ப்பாரே ஆயின் நிச்சயம் ஜாதரால் கஷ்டங்களை தாக்கு பிடிக்க முடியாது, தனது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குதிரை கொம்பாகி விடும்

பூர்விகம் கெடுவதற்கு முக்கிய காரணங்கள் :

ஜாதகரின் முன்னோர்கள் தம்மை நாடிவந்தவர்களை நிந்தனை செய்வதாலும், பெண்களை போக பொருளாக நடத்தியதாலும் , தனது மனைவியை கொடுமை செய்து  மனம் நோக செய்ததாலும் , பசுவை கொன்றதாலும் , இளம் பெண்ணை  மான பங்கம் செய்ததாலும் .மற்றவர் சொத்தை அகபரித்து கொண்டு  அவர்களை மனம் நோக செய்ததாலும் , மற்றவர் மரணத்திற்கு நேரடியாக மறைமுகமாக காரணமாக இருந்தாலும் , சிவனடியார்களுக்கு அண்ணம் இடாத காரணத்தாலும், தனது குல தெய்வத்தை நிந்தனை செய்ததாலும் , தனது குழந்தையை தானே கொன்றதாலும் , தனது பெற்றோர்களை வயதான காலத்தில்  பேணி பாதுகாக்கும் கடமையை செய்யாத காரணத்தினாலும். கோவில் சொத்தை அகபரித்து கொண்ட காரணத்தினாலும்  நிச்சயம் பூர்விகம் 100  சதவிகதம் பாதிப்படைய வாய்ப்பு உண்டு.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வலுப்படுத்தும் பரிகாரங்கள்…

ஐந்தாம் அதிபதி1-ல் நின்றால்…குலதெய்வ கோயிலுக்கு மலர்மாலைகள் வாங்கிதரவும்…

ஐந்தாம் அதிபதி-2ல்…

குலதெய்வக்கோயிலில் அன்னதானத்துக்கு இயன்ற உதவி செய்யவும்..
..

ஐந்தாம் அதிபதி3-ல்

குலதெய்வக்கோயிலுக்கு மணிவாங்கி தரவும்..

ஐந்தாம் அதிபதி4-ல …

குலதெய்வத்துக்கு பசும்பால் அபிசேகம் செய்யவும் வசதியிருப்பவர்கள் கோதானம் செய்யவும்..

ஐந்தாம் அதிபதி5-ல்

குலதெய்வக்கோயிலில் அல்லது சிவன் கோயிலில் ஆலமரம் அரசமரம் நட்டு பராமரிக்கவும்..

ஐந்தாம் அதிபதி 6 -ல்…

குலதெய்வத்தை ஆத்மார்த்தமாக சரண்டைந்து வழிபடவேண்டும்..

ஐந்தாம் அதிபதி7-ல்…

குலதெய்வ கோவிலில் வில்வமரம் தென்னங்கன்று நட்டு வைக்கவும்.

ஐந்தாம் அதிபதி 8 -ல் குலதெய்வம் / இஷ்ட தெய்வத்துக்கு சந்தனக்காப்பு வைத்து வழிபடவும்

ஐந்தாம் அதிபதி-9 ல்..

பெளர்ணமிதிதியில் குலதெய்வத்தை வழிபடவும்

ஐந்தாம் அதிபதி10-ல்..

குலதெய்வத்துக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்

ஐந்தாம் அதிபதி11-ல்..

வெள்ளிக்கிழமை குலதெய்வத்துக்கு சக்கரை பொங்கல் படைத்து வழிபடவும்..

ஐந்தாம் அதிபதி12-ல்..
குலதெய்வ வழிபாட்டில் தீவிரம் காட்ட வேண்டும்…

என்றும் அன்புடன்
S.சுதாகரன்

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply