பிரபஞ்ச சக்திக்கும் தெய்வத்தின் ஆசிர்வாதமும்…!

பிரபஞ்ச சக்தி என்றால் என்ன?

*பிரபஞ்ச சக்தி என்றால் என்ன என பார்ப்போம்…*

இந்த சக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்றது. இது இயற்கையாகவே எல்லா உயிரினத்திலும் உள்ளது.

நாம் நம்முடைய செயற்கையான வாழ்கைமுறையின் மூலம் நம்முடைய சக்தியை பெருமளவு இழந்துவிட்டோம்.

மீதம் இருப்பது நம்மையும் அறியாமல் நாம் செய்யும் சுவாசத்தின் மூலமும் அவ்வப்போது நாம் செய்யும் தியானம் மற்றும் இறைவழிபாடு மூலமும் தான்.

இந்த பிரபஞ்ச சக்தியை பெற வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டுவது தியானம் அல்லது இறைவழிபாடு போன்றவைதான்.

இதில் தியானம் என்பது நாம் நினைப்பது போல முற்றும் துறந்த நிலை அல்ல.

மாறாக தியானம் என்பது ஒரு சுவாச பயிற்சியே ஆகும்.

நல்ல அமைதியான காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து ரிலாக்ஸாக உங்களுக்கு பிடித்தமான ஒன்றை நினைத்து கொண்டு இருந்தாலெ போதும் உன்கள் உடம்பு தானாக பிரபஞ்ச சக்தியை கிரகிக்க ஆரம்பிக்கும்.

ஆனால் நீங்கள் சிந்திக்கும் விஷயம் நேர்மறையாகவும் உங்கல் மனதிற்கு அமைதியை தரகூடியதாகவும் இருக்க
வேண்டும்.

இந்த நிலை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடியதாகவும் உங்கள் உடம்பை நீங்கள் தள்ளி நின்று மனதளவில் ரசிக்க கூடிய நிலையிலும் இருக்க வேண்டும்.

பலர் தியானமும் இறைவழிபாடும் வெவ்வேறு என நினைக்கின்றார்கள்.

அது மிகவும் தவறு.

இறைவழிபாடும் ஒரு வகையான தியானமே.

இறைவழிபாட்டில் மனதை ஒருமுக படுத்தி இறைவனின் அருலை நாம் உள்வாங்கி கொள்கின்றோம்.

தியானத்தின் மூலம் மனதை ஒருமுகபடுத்தி பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி கொள்கின்றோம்.

நாத்தீகர்கள் இறைவனை பிரபஞ்ச சக்தி என கூறுகின்றார்கள்.

ஆத்தீகர்கள் இறைவனின் சக்தியை பிரபஞ்ச சக்தி என நம்புகின்றார்கள்.

சரி இதனால் என்ன பலன்:

நிறைய இருக்கின்றது குறிப்பாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நம் உடலில் வரகூடிய வியாதிகளுக்கு குறிப்பாக தோல் சம்பந்தபட்ட வியாதிகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கெல்லாம் மூல காரணம் நம் உடலில் இருக்க கூடிய பிரபஞ்ச சக்தியில் அளவு குறைந்து போனதே ஆகும்.

இந்த சக்தியினால் நம் உடலில் ரத்த ஓட்டம் சீராகின்றது..

ரத்தஓட்டம் சீராகும் போது நம் உடம்பு புத்துணர்ச்சி அடைகின்றது.

முறையான இல்லர வாழ்கைக்கும் இது துணை புரிகின்றது.

இதய சம்பந்தமான வியாதிகளை பெருமளவு குறைகின்றது.

இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அறவே வராது.

இன்னும் சொல்லபோனால் நம் உடம்பிற்கு வரகூடிய பாதி வியாதிகளுக்கு மனமே காரணம் என நான் சொல்ல வில்லை மருத்துவம் சொல்கின்றது.

இந்த தியானம் மற்றும் இறைவழிபாடு மூலம் நன் உடல் வியாதிகளில் பாதியை போக்கி கொள்ளமுடியும் என்பதே அறிவியல் உண்மை….

தெய்வத்தின் ஆசிர்வாதம் :

கடவுளின் ஆசீர்வாதம் என்பது மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவருக்கும் இருப்பது தான். ஆனால் ஒரு சிலருக்கு, அந்த கடவுளின் ஆசீர்வாதமானது கூடுதலாக கிடைத்திருக்கும். இந்த கலியுகத்தில் எந்த கடவுளும் நேரடியாக வந்து யாரையும் ஆசிர்வாதம் செய்யப்போவது இல்லை. ஆனால் மனித ரூபத்தில் கூட அந்தக் கடவுளானவர் தோன்றி நமக்கு வரும் கஷ்டத்தை தீர்த்து வைத்திருப்பார். அதை சிலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். இப்படி தானாகவே அந்த கடவுள் முன்வந்து ஒருவருக்கு நல்ல வழியை காட்டுகின்றார் என்றால் அவர் நிச்சயம் கடவுளின் ஆசியை அதிகமாக பெற்றவராகத்தான் இருக்க முடியும். இப்படி நம் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களை வைத்து அந்தக் கடவுளின் ஆசி நமக்கு பரிபூரணமாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கும் வாழ்வில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதா? என்பதை நினைத்துப் பார்த்து, அந்த கடவுள் இதுநாள்வரை உங்களிடம் தான் இருந்திருக்கிறார் என்பதை உணருங்கள்.

எல்லோரும் கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக தான் வைத்திருப்போம். ஆனால் சில சமயங்களில் கோவிலுக்கு செல்லும் போது நம்மை அறியாமலேயே ஒரு இனம் புரியாத சந்தோஷமானது நம் மனதிற்குள் வந்துவிடும். அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகரோ, பூசாரியோ நாம் கேட்காமலேயே அந்த சுவாமியின் பிரசாதத்தை நம் கைகளில் கொண்டுவந்து கொடுப்பார். அந்த பிரசாதத்தை கையில் வாங்கிக்கொண்டு அந்த இறைவனை நோக்கி இரண்டு கைகளையும் எடுத்து கும்பிடும் போது நம்மை அறியாமலேயே நம் கண்களிலிருந்து கண்ணீர் வரும். எல்லா கஷ்டமும் தீர்ந்து விட்டது போன்ற மன நிம்மதியும் அடைவோம். அந்த தருணத்தில் நாம் எதிர்பார்க்காத ஒரு மகிழ்ச்சியான செய்தி நம்மை வந்து சேரும். இந்த அறிகுறியானது நம்மை கடவுள் ஆசிர்வாதம் செய்து உள்ளார் என்பதை தான் குறிக்கின்றது.

நம் வீட்டில் தீர்க்கவே முடியாத பிரச்சனையை தீர்ப்பதற்கு வேண்டிக்கொள்ள நாம் கோவிலுக்கு செல்வோம். எதிர்பாராமல் கோயிலில் சந்திக்கும் ஒருவரிடம் பிரச்சினையை கூற, அவர் நமக்காக ஒரு ஆலோசனையை கூறியிருப்பார். அந்த ஆலோசனை ஏதாவது ஒரு சுலபமான பரிகாரமாக கூட இருக்கலாம். அந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு அந்த இறைவனுக்கு நாம் செய்து வருவோம். இப்படி தொடர்ந்து அதை செய்து வரும்போது தீர்க்கவே முடியாது என்று நினைத்திருந்த அந்த பிரச்சனையானது ஒருகட்டத்தில் ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையானது நிறைய பேரின் வாழ்க்கையில் அனுபரீதியாக நடந்து இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அந்த இடத்தில் உங்களுக்கு பரிகாரம் சொன்ன அந்த நபர் அந்த இறைவனின் ரூபம் தான். அந்த இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு அந்த இடத்தில் கிடைத்திருக்கின்றது என்றுதான் அர்த்தம்.

இந்த இடத்தில் பரிகாரம் என்பது கடவுளுக்கு செய்வது மட்டுமல்ல. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்ற வருத்தத்தில் இருந்திருப்பீர்கள். அல்லது உங்கள் குழந்தைக்கு தீர்க்கமுடியாத நோய் ஏதாவது இருந்திருக்கும். முகம் தெரியாத மனிதர் ஒருவர் சொல்லி இருப்பார். இந்த மருத்துவமனைக்கு சென்றால் இந்த பிரச்சனை பரிபூரணமாக தீர்ந்துவிடும் என்று. அந்த இடத்திற்கு சென்று நாம் சிகிச்சை எடுத்து நல்ல பயனும் அடைந்திருப்போம். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன அந்த முகம் தெரியாத மனிதன் கடவுள்.

நமக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே மனித ரூபத்தில் வந்து அந்த இறைவன் கூறியிருப்பார். ஏதாவது ஒரு வேலையை நாம் செய்து முடித்து விடவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருப்போம். அந்த குறிப்பிட்ட வேலையை  செய்தால் நமக்கு பெரிய லாபம் கிடைக்கும் என்று நினைத்து வைத்து இருந்திருப்போம். உதாரணமாக ஒரு நிலம் வாங்க எல்லா முயற்சியையும் நாம்  மேற்கொண்டிருப்போம், நம் மனதிற்கு பிடித்தமான ஒரு இடத்தையும் நாம் தேடி கண்டுபிடித்து விடுவோம். நிலத்தை விற்பவரும் நமக்கு கொடுப்பதற்கு தயாராக தான் இருப்பார். நிலத்தை பதிவு செய்து நம் பெயருக்கு மாற்ற வேண்டும். அவ்வளவு தான். மற்ற வேலைகளை எல்லாம் நாம் முடித்து வைத்திருப்போம். ஆனால் கடைசியில் ஏதாவது ஒரு பிரச்சினையின் மூலம் அந்த இடத்தை நம்மால் வாங்க முடியாமல் போயிருக்கும். யாரோ ஒருவர் மூலமாக அந்த இடமானது நம் கையை விட்டு பரி போயிருக்கும். இந்த சமயத்தில் நம் மனவருத்தத்தை நம்மால் வார்த்தையால் சொல்ல முடியாது. ஆனால் சில நாட்கள் கழித்து பார்த்தால் அந்த இடத்தை வேறு ஒருவர் வாங்கி பெரிய வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டு இருப்பார். நல்லவேளை இந்த இடத்தை நான் வாங்கவில்லை என்று பெருமூச்சு விடுவீர்கள். அந்த சமயம் உங்களை கடவுள் காப்பாற்றி இருக்கின்றார் என்பதுதான் அர்த்தம்.

சில சமயம் நம் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது முதலில் ஒரு பேருந்து வரும். கூட்டமாக இருக்கிறது இதில் செல்ல வேண்டாம் அடுத்த பேருந்தில் செல்லலாம் என்று அருகில் இருப்பவர் கூறுவார். நாமும் சரி என்று இதை விட்டு விட்டு அடுத்த பேருந்தில் செல்வோம். அதன்பிறகு பார்த்தால் முதலில் வந்த பேருந்து விபத்துக்குள்ளாகி இருக்கும். நல்ல நேரம் அந்த பேருந்தில் நான் சென்றிருந்தால் என் உயிருக்கு ஆபத்தாகி இருந்திருக்கும் என்று நினைத்தவர்கள் எத்தனை பேர். சில நேரங்களில் நம் உயிரை கூட நம் நல்ல நேரமானது காப்பாற்றும். இதுவும் கடவுளின் செயல் தான்.

இப்படி எதிர்பாராமல் நடக்கும் பலவிதமான செயல்பாடுகளில் நமக்கு வரப்போகும் ஆபத்திலிருந்து நாம் தப்பித்து வருகின்றோம் என்றால் அது தானாக நடப்பது இல்லை. அந்த இறைவனின் ஆசீர்வாதம் இருப்பதால்தான் நமக்கு ஏற்பட இருந்த துன்பங்களிலிருந்து எல்லாம் தப்பித்துக் கொண்டு வருகின்றோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தவிர இறைவன் நேரடியாக தேவலோகத்திலிருந்து இறங்கி வந்து உதவி செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

தெய்வ அர்ச்சனைக்கு எந்த பூக்களை பயன்படுத்தினால் என்ன பலன் என தெரியுமா?

என்றும் அன்புடன் :
S.சுதாகரன்

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்… 

Leave a Reply