காமம் ஆன்மீகமானது …!

காமம் ஆன்மீகமானது…!


 

தலைப்பை பார்த்து யாரும் தவறான எண்ணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டாம்.

காமம் என்பது ஆன்மீக வழியில் மட்டும் அல்ல அது எப்போதும் எங்கிலும் புனிதமானது தான்.

அது  எப்படியென்று  இந்த பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க..

 

நண்பர்கள் பலர் கேட்கும் கேள்வி இது தான்

“நான் ஆன்மீக பாதையில் செல்ல காமம் எனக்கு தடையாக உள்ளது.

அந்த எண்ணம் ஏன் வருகிறது?

இந்த எண்ணத்தை அறவே ஒழிக்க முடியாதா?

எனக்கு காமத்தை போக்கவும்;அந்த நியாபகமே சுத்தமாக வராமல் இருக்க

ஏதாவது மருந்து இருந்தால் கொடுங்கள் ஐயா என்று கூட சிலர் கேட்டதுண்டு.

ஒரு விஷயத்தை மட்டும் நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்

“காமம்” ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல,

காமத்தை தொடாமல் ஆன்மீகமே இல்லை.

காமத்தை ஒழித்து விட்டு தான் நான் ஆன்மீகத்திற்கு செல்வேன் என்பது போலி வேடம் அது ரொம்ப நாள் நிலைக்காது.

காமத்தை வெறுப்பவன் எவனோ அவன் ஆன்மீக பாதையில்

சரியாக பயணிக்கவும் முடியாது.

அவன் ஆன்மீகத்தை புரிந்துக்கொள்ளவும் முடியாது.

“என்னங்க ஐயா சொல்றீங்க….?

ஆன்மீகத்தில் நம்முடைய புலன்களை அடக்கினால்தானே நமக்கு ஞானம் கிடைக்கிறது…?

காமத்தை அடக்காமல் ஞானம் கிடைக்குமா என்ன…?

அதாவது ஒரு சந்யாசி மட்டும் தானே யோகியாக இருக்க முடியும்…? பிரம்மச்சாரிய விரதம் எடுப்பவருக்கு உடலில் தாதுபலம் அதிகரிக்கும் இல்லையா…?

அவரது மெய்யில் தேஜஸ் கூடும் என்று சொல்வது உண்மைதானே….?

இதனால்தானே பிரம்மச்சாரியம் எடுக்கும் சாமியார்களால் மக்களைக் கவர முடிகிறது…..?”

என்று தானே கேட்கிறீர்கள்…?

நீங்கள் கேட்கும் கேள்விகள் சரிதான் அதாவது விந்துவை அடக்கினால் யோகபலம் உண்டாகும் என்றுதானே சித்தர்கள் சொல்கிறார்கள்….?!

அதற்காக காமத்தை அடக்கு,

அதை முழுமையாக அனுபவிக்காதே

அந்த எண்ணத்தை முழுமையாக முடக்கு என்று கூறவில்லையே….?!

அப்படி காமம் தவறு;அது அறுவருப்பானது என்றெல்லாம் சித்தர்கள் எண்ணிருந்தால்

லிங்க வழிபாடு இந்தியாவில் இருந்திருக்காதே….!

உறவின் மூலம் கருத்தரித்து, குழந்தையை ஒரு பெண் பிரசவிப்பது அற்புதமான நிகழ்வு.

“காமம்” தான் இதற்கு அடிப்படை. அதனால்தான்,

நம் சித்தர்கள் காமத்தை புனிதமாகப் பார்த்தார்கள்.

மனித

இனப்பெருக்கத்துக்கு காரணமான ஆண்குறி, பெண்குறியை,

தெய்வீக சக்தியாகக் கருதினார்கள். காமம் சார்ந்த விஷயங்களை மரியாதையோடு அணுகினார்கள்.

அதன் வெளிப்பாடுதான்

ஆண்குறி, பெண்குறி வழிபாடுகள். இந்தியாவில் மட்டுமல்ல..

மெக்சிகோ, கிரீஸ், ரோம்,  பாபிலோனியா, ஆஸ்திரியா, எகிப்து, என உலகம் முழுவதும் இத்தகைய வழிபாடுகள் நடந்திருக்கின்றன. இடைக்கால கத்தோலிக்கக் கிறிஸ்தவர்ளும் பாலியல்

உறுப்புக்களை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

அதற்கான  சான்றுகள் நெதர்லாந்து கலாச்சாரத்தில் உள்ளன.

குளிர் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் பாலியலில்  அதிகமாக ஈடுபட்டனர். அதனாலேயே, அத்தகைய எண்ணங்கள்..,

இலக்கியம், சித்திரம், சிற்பம் என எல்லாவற்றிலும் வெளிப்பட்டன.

ஐரோப்பாவில்,

வெள்ளை இன நாகரீகம் முதலில் தோன்றிய பல்கேரியாவில்,

பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய புதைகுழிகளில் (கல்லறைகளில்)

ஆண்குறிக்கு தங்கக் கவசம் அணிந்திருந்த மதகுரு ஒருவரின் எலும்புக்கூட்டை கண்டெடுத்திருக்கின்றனர்.

இத்தாலியில் உள்ள பாம்ப்பேயில் நடத்திய அகழ்வாய்வின் போது,

இரண்டு விரைகளுடன் கூடிய ஆண் குறிகளின் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

ஜப்பானில் கானயாமா என்ற கோவில் இருக்கிறது.

அங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமையில்,

ஆண்குறி திருவிழாவே நடத்துகிறார்கள்.

சிந்துவெளி நாகரிக காலத்திலேயே இந்தியாவில் லிங்க வழிபாடு இருந்திருக்கிறது.

லிங்க வழிபாடும் பெண்குறி  வழிபாடும் தமிழர் மரபிலும் உண்டு.

லிங்கம் என்பது ஆண் வடிவமும்,

பெண் வடிவமும் இணைந்தது.

ஆண் வடிவம் என்பது தண்டு போன்ற தோற்றத்துடன் இருப்பது.

ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் ஆண் வடிவம் அமைந்திருக்கும் நிலையே லிங்கம் ஆகும்.

அன்றைய நிர்வாண உலகத்தில், ஆண்குறி பெண்குறி குறித்த எண்ணங்கள், அவர்களை ஆக்கிரமித்து, சிலைகளாகி, பின்னாளில் கடவுளாகி இருக்கின்றன.

எங்கெங்கோ இருந்தாலும்,

எவ்வளவு தொலைவில் இருந்தாலும், குறி வழிபாடு விஷயத்தில்,

ஒரே மாதிரியான சிந்தனை உலக மக்களுக்கு எப்படி வந்தது….?

மனித இனத்தை உருவாக்கும் அடையாளமாகக் குறிகளைக் கருதிய எண்ணம் அனைவருக்கும் பொதுவானதாக இருந்திருக்கின்றது அல்லவா….?

இதற்கெல்லாம்,

ஒரு நாட்டைப் பார்த்து இன்னொரு நாடு கற்க வேண்டிய அவசியம் இல்லை. என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில்

காமத்தை தொட்டுப்பார்க்காத சித்தர்களே கிடையாது,

அந்த வரிசையில் போகரை அடுத்து

கோரக்கர் தன் பாடலில்

“பித்தர்களே ஓதிடுவேன் பெருமை கேளீர்

பேய்போல திரியாதீர் பிதற்றல் வேண்டாம்

உத்தமியாள் தன்னுடனே புணரும் போது

உன்னுடைய இந்திரியம் விட்டேங்காதே

பத்தினியாள் இச்சைகாமம் பருகத்தாக்கி

மதனமிட்டு கொண்டிடுவாய் பாழ்போகாதே.

போகத்தில் இந்திரியம் பொங்காதுய்யா

புத்தியுடன் புகன்றிடுவேன் அறிந்து கொள்வீர்

பாகமுடன் பரிஎன்ற வாசி பூட்டிப்

பக்குவமாய் ஓம்சிவய வசிஎன்றே

ஏகமனம் பேசாது நூறு செப்பி

எகராமல் கும்பித்துப் புணர்வாயானால்

தாகமுறும் மாமயில் ஆசை நீங்கும்

தங்கிவிடும் உன்விந்திந்த விதமுமாமே.

இந்தவித முலகோருக் கியல்பைக் காட்ட

எடுத்தணைத்தார் மூவர்களும் பெண்ணைத்தானே

விந்து நிலையா மூட மாந்தர்

விபரிதமாய் வீண்பேச்சுப் பேசிக்கெட்டார்

அந்தரங்க மர்மமிதை யறியாமற்றான்

ஆருலகில் அரிவையரை ஆகாதென்றார்”.

அதாவது

இதன் பொருள் என்னவென்றால்

‘பித்தர்களே உங்களுக்கு ஒரு பெருமை மிகுந்த முறையை சொல்கிறேன் கேளுங்கள்,

காம எண்ணத்தோடு கண்ட

பெண்களை தேடி திரியாதீர்கள்,பெண்களை பார்த்து காம புலம்பல் புலம்பாதீர்கள்,

உங்கள் மனைவியிடம் மட்டும் உறவு கொள்ளுங்கள், அப்படி உறவு கொள்ளும் போது உங்கள் விந்து சக்தியை இழந்து விட்டு ஏங்காதீர்கள்,

மனைவியாய் இருந்தாலும் அளவுக்கு மீறி உறவு கொண்டு வாழ்க்கையை பாழாக்கி விடாதீர்கள்.

போகத்தின்போது விந்து வெளியேறி வீணாகாமல் இருப்பதற்க்காக ஓரு முறையை சொல்கிறேன்,

இதை புத்தியுடன் பின்பற்றுங்கள். எப்போதும் குதிரைபோல் ஓடிக்கொண்டிருக்கும் மூச்சை மெதுவாக இழுத்தடக்கிக் வைத்துக்கொண்டு

பிரணவத்தோடு

“சிவயவசி” என்ற மந்திரத்தை

மன ஓர்நிலையோடு மனதினுள்

100- செபித்து விட்டு பின்னர் பெண்களுடன் உறவு கொண்டால் அப்பெண்ணின் காம ஆசையும்,

காம ஏக்கமும் எந்த அளவு இருந்தாலும் அது தணியும்.

நீ எவ்வளவு நேரம் உறவு கொண்டாலும் உன் விந்து வெளியேறாது உள்ளேயே தங்கி விடும்.

இந்த முறையை உலக மக்களுக்கு காட்டவே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர்களும் பெண்ணை அணைத்தபடி காட்சி தருகிறார்கள்.

அதாவது பெண்ணுடன் உறவு கொண்டாலும் தெய்வதன்மையை இழக்காமல் இருப்பதை இது காட்டும்.

விந்துவை அடக்கமுடியாத மூடமனிதர்கள் வீண் பேச்சுக்களை பேசியே கெட்டுப்போனார்கள் என்று கோரக்கர் கூறுகின்றார்.

காமத்தை இந்த உலகில் யாராலும் வெல்ல முடியாது

அதற்கு முன்னாள் எல்லா ஜீவராசிங்களும் மண்டியிட்டு தான் ஆகவேண்டும்; நமக்கு எதுக்கு வம்பு….?

பேசாம நம்மளும் குப்புற விழுந்து வணங்கிடுவோம்

ஓம் சிவ ய வசி ஓம்

நன்றி.

என்றும் அன்புடன் :

பொன்னி சுதாகரன்,

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…

Leave a Reply