கல்வியும் சமுதாயமும்

கல்வியும் சமுதாயமும்


  • மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும்.
  •  கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா ? இல்லை அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன்தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.
  •  வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல. மனதை ஒருமுகப்படுத்துவது  தான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும்.

 

  • மீண்டும் ஒரு முறை நான் கல்வி கற்பதாக இருந்தால், அந்த விஷயத்தில் சுதந்திரம் ஏதாவது எனக்கு இருக்குமானால், புள்ளி விவரங்களை நான படிக்க மாட்டேன். முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், பற்றில்லாமல் இருக்கும் திறந்த உள்ளத்தையும் வளர்த்துக் கொள்வேன். அதன் பிறகு, பண்படுத்தப்பட்ட அந்தக் கருவியைக் கொண்டு, நினைத்த நேரத்தில் உண்மைகளை நான் சேகரித்துக் கொள்வேன்.
  •  பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும்,சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, அதைக் கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.
  • கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.வாழ்க்கையை உருவாக்கக் கூடிய. மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக்களைக் கிரகித்து அவற்றை நாம் நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும்.நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக் கொண்டு, அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் – ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.
  • நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டு பிடித்தார் என்று சொல்கிறோம். அது எங்காவது ஒரு மூலையில் அவர் வருவார் என்று உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டு பிடித்தார்.காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கிற அறிவு முழுவதும் மனதிலிருந்துதான் வந்திருக்கிறது. பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல்நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது. வெளி உலகம் வெறும் தூண்டுதலாக மட்டுமே அமைகிறது. அமைந்து உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
  • ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகி றான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம் மசரிய முறை இந்த நாளில் மறைந்து போனதுதான் இதற்குக் காரணம்.முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக் கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.
  • கல்வி, கல்வி, கல்வி ஒன்றே இப்போது நமக்குத் தேவை! ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பிரயாணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக்கூடக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும் கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நமது நாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்? கல்வி என்பதுதான் எனக்குக் கிடைத்த விடை.
  • சிரத்தைதான் நமக்குத் தேவை. துரதிர்ஷ்டவ சமாக இந்தியாவிலிருந்து இது கிட்டத்தட்ட மறைந்தே போயிருக்கிறது. இப்போது நாம் இருக்கும் நிலைமைக்கே சிரத்தையை இழந்துவிட்டதுதான் கார ணமாகும். மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணம், இந்தச் சிரத்தையிலுள்ள வேறுபாடே தவிர வேறொன்றுமில்லை. இந்தச் சிரத்தைதான் ஒரு மனித னைப் பலவீனனாகவும் தாழ்ந்தவனாகவும் ஆக்கிவிடுகிறது.
  • நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்துகொண்டிருக்கிறது. அதாவது, எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.
  • தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து, இழந்துவிட்ட தங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக்கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும்….. உயர்ந்த கருத்துக்களை அவர்களுக்குக் கொடுங்கள்.அந்த ஒரே ஒரு உதவிதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும். இரசாயனப் பொருள்களை ஒன்றுசேர்த்து வைப்பதுதான் நமது கடமை. பின்பு அவை இயற்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறிவிடும். இப்போது மலை முகமதுவிடம் செல்லாவிட்டால், முகமதுதான் மலையிடம் செல்ல வேண்டும். ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
  • எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

மேலும் படிக்க : மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான்.

  •  தலைமுறை தலைமுறையாக நிலவிய, வெளியே ஓடும் மனதைத் தடுத்து நிறுத்திய கல்வி முறை இப்போது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட் டது. இதுவா கல்விமுறை?இத்தகைய கல்விமுறையின் ஆதிக்கத்தின் விளைவாகப் பழங் கருத்துக்கள்கூட ஒவ்வொன்றாக மறைந்து கொண்டே வருகின்றன. புதிய கருத்துக்கள் பயன்படாமற்போனது வேண்டியதே இல்லை. பற்றியோ சொல்லமனிதனை மெல்ல மெல்ல இயந்திரமாக்கிக் கொண்டு வருவதும் ஒரு கல்வியா? அந்த இயந்திரமே எவ்வளவோ பாக்கியம் செய்தது. ஓர் இயந்திரத்தைப் போல நல்லவனாக இருப்பதைவிடவும். ஒருவன் தன்னுடைய சுதந்திர மனப்பான்மையாலும் அறிவாலும் உந்தப்பட்டுத் தவறு செய்வதே மேல் என்பது என்னுடைய கருத்து.
  •  மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும் பிரம்மசரியமும், வாழ்க்கையின் அடிப்படை தேவைப்படுகின்றன. இலட்சியங்களாக நமக்குத் எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடங்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.மதம்தான் எல்லாவற்றிற்கும் உயிர்நாடி. சமய வாழ்க்கை சோறு போன்றது. மற்றவை எல்லாமே கறி. கூட்டுப் போன்றவை. கறி. கூட்டு வகைகளை மட்டும் உண்பதனால் அஜீர்ணம் ஏற்படுகிறது. அப்படியே சோற்றை மட்டுமே சாப்பிட்டாலும் அஜீர்ணம் ஏற்படும்.
  •  பிரம்மசரியத்தை உறுதியாக அனுஷ்டிக்கிற ஒரே ஒரு காரணத்தாலேயே, எல்லாவிதமான கல்வியறிவையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்ச்சி பெற்றுவிட முடியும். அத்தகையவன் ஒரே ஒரு முறை, தான் கேட்டதையும் அறிவதையும் மறவாமல் நினைவில் வைத்துக்கொள்கிறான். இப்படிப்பட்ட பிரம்மசரியம் நம் நாட்டில் இல்லாமற் போனதனால் தான், எல்லாமே இன்று அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன.
  •  குருகுல முறையில் ஆசிரியனோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு பயிற்சி பெறுவதுதான் சிறந்த கல்விமுறை என்பது எனது கருத்து. ஆசிரியரின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக அமையாமல் எந்தவிதக் கல்வியையும் பெற முடியாது.உங்கள் பல்கலைக் கழகங்களை எடுத்துக் கொள் ளுங்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவை இருந்து என்ன சாதித்திருக்கின்றன? (1897-ஆம் ஆண்டில் சென்னைச் சொற்பொழிவு ஒன்றில் விவேகானந்தர் குறிப்பிட்டது.) சுயமாகச் சிந்திக்கும் உண்மையான மனிதன் ஒருவனையும் அவை உண்டாக்கியதாகத் தெரியவில்லை. அவை வெறும் தேர்வுகளை நடத்தும் நிறுவனங்களாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. பொது நலத்திற்காக நம்மைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்து நமது நாட்டில் இன்னும் வளராமலேயே இருக்கிறது.
  •  பழைய சமுதாயமானாலும் புதிய சமுதாயமானாலும் உண்மை எதற்கும் தலை வணங்காது. சமுதாயம்தான் உண்மைக்குத் தலைவணங்க வேண்டும் அல்லது அழியவேண்டும். உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் சமுதாயங்களை உருவாக்க வேண்டும். சமுதாயத்திற்கு ஏற்றாற்போல் உண்மை தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளக் கூடாது.
  • எங்கு உயர்ந்த உண்மைகள் நடைமுறையில் இருக்கின்றனவோ, அந்தச் சமுதாயம்தான் சிறந்தது. இதுவே என்னுடைய கருத்து.சமுதாயம் உயர்ந்த உண்மைகளுக்குத் தகுதி உடையதாக இல்லாவிட்டால், அதைத் தகுதி உடையதாகச் செய். எவ்வளவு விரையில் இதைச் செய்யமுடியுமோ, அந்த அளவுக்கு நன்மை ஏற்படும்.
  •  மக்களின் தளைகளை நீக்கி உள்ளனால் இயன்ற அளவுக்கு அவர்களை விடுதலை பெறச் செய். இன் பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன் னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுவாய். அப்போது நீ ஒரு முக்தன் ஆவாய்.
  •  ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்:-1. நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.2. பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல்.3. நல்லவர்களாக இருக்கவும் நன்மையைச் செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.
  • உன்னுடைய இலட்சியம் ஜடப்பொருள் என்றால் ஜடப் பொருளாகவே நீ ஆகிவிடுவாய். கவனித்துப் பார். ஆன்மாவை அடைவதுதான் நம்முடைய இலட்சியம். அது ஒன்றே ஒன்றுதான் எப்போதும் இருந்து வருகிறது. ஆன்மாவைத் தவிர வேறொன்றும் இல்லை. அதைப் போலவே நாமும் என்றென்றும் வாழ்ந்திருப்போம்.
  • இந்து மதத்தைச் சேர்ந்தவன் குடிப்பதும் மத வாழ்க்கையை ஒட்டித்தான்; நடப்பதும் மத வாழ்க்கையை ஒட்டித்தான்; திருமணம் செய்துகொள் வதும் மத வாழ்க்கையை ஒட்டித்தான்; கொள்ளைய டிப்பதும் மத வாழ்க்கையை ஒட்டித்தான்.ஒவ்வொரு நாடும் உலகிற்கு ஆற்ற வேண்டிய பணி ஒன்று உண்டு. அந்தப் பணிக்குத் தீங்கு நேராத வகையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அந்த நாடு நிலைத்து வாழும். ஆனால் அந்தப் பணிக்கு அழிவு வந்தவுடனே அந்த நாடு சிதைந்துவிடுகிறது.
  • கற்பு நிலையிலிருந்து வழுவதுதான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறி என்பதை வரலாற்றில் நீ பார்க்கவில்லையா? கற்புத் தவறுதல் என்ற கேடு சமுதாயத்தில் நுழையும் பொழுது அந்த இனத்திற்கு தெளிவாகிவிடுகிறது. முடிவுக்காலம் நெருங்குவது .
  • இப்போது நாம் விலங்குகளைவிட அதிக அள வில் ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயத்தின் கட்டுப்பாடு என்னும் சாட்டையடிகளால்தான் நாம் அழுத்தி அடக்கி வைக்கப் பட்டிருக்கிறோம். இன்று சமூகம், ‘நீ திருடினால் நான் உன்னை தண்டிக்கப் போவதில்லை’ என்று சொல்லிவிடுமானால், உடனே நாம் விரைந்து ஒருவர் மற்றொருவருடைய சொத்துக்க ளைப் பறிப்பதற்காகப் பாய்ந்து ஓடுவோம். போலீஸ் காரர்கள்தாம் நம்மை நல்ல ஒழுக்கம் உடைய வர்களாக வைத்திருக்கிறார்கள். சமுதாயத்தின் பொது அபிப்பிராயம்தான் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக வைத்திருக்கிறது. உண்மையில் மிருகங்களைவிட நாம் சிறிதும் உயர்ந்தவர்களாக இல்லை.
  • சமுதாயத்தில் காணப்படும் பெரும்பாலான மதப் பிரிவுகள் தாற்காலிகமானவையாகும். நீர்க்குமிழிகளைப் போலச் சிறிது காலம் இருந்து அவை மறைந்து விடும். ஏனென்றால் அதன் தலைவர்கள் பொதுவாகச் சிறந்த ஒழுக்கம் இல்லாதவர்களாக இருப்பதுதான் இதற்குக் காரணம். பரிபூரணமான அன்பு, தீங்கிழைத்தவர்களுக்கும் பதிலுக்குத் தீங்கு நினைக்காத இதயம் – ஆகிய இவைதாம் சிறந்த ஒழுக்கத்தை உருவாக்குகின்றன. தலைவரிடம் சிறந்த ஒழுக்கம் இல்லாவிட்டால் அவரிடம் நம்பிக்கை வைப்பதற்கு வாய்ப்பில்லை. தலைவர் தூய்மையுடையவராக இருக்கும்போது, உறுதியான நிலைத்த நம்பிக்கையும் பற்றும் ஏற்படுகின்றன.
  • ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
  • உங்களுடைய சமயத்தால் (rrligion) சமுதா யத்துக்கு என்ன நம்மை?’ என்று நம்மைக் கேட்கி றார்கள். இவ்விதம் கேட்பதனால் உண்மையின் சோத னைக்களனாகச் சமுதாயம் ஆகிறது. இது தர்க்கத் திற்கு மிகவும் முரண்படுகிறது.சமுதாயம் என்பது வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு நிலை. அதில் நாம் கடந்து சென்றுகொண்டிருக்கி றோம். சமுதாயம் மாறாமல் ஒரு நிலையிலேயே எப் போதும் நிரந்தரமாக இருப்பதாக இருந்தால் அது, குழந்தை என்றென்றைக்கும் குழந்தையாகவே இருப்ப தைப் போன்றதாகும்.முழு வளர்ச்சி அடைந்த மனிதனாகிய குழந்தை என்ற ஒரு நிலை இருக்க முடியாது. மனிதன், குழந்தை என்ற இரண்டு சொற்களுமே ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. எனவே பரிபூரண நிலையை அடைந்த சமுதாயம் என்று ஒன்று இருப்பதற்கில்லை. சமுதாயத்தின் இத்தகைய ஆரம்ப நிலைகளிலிருந்து மனிதன் வளர்ச்சி அடைய வேண்டும். அவன் வளர்ச்சியும் அடைவான்…. “உனக்குள் இருக்கும் தாமரையை நீ ஏன் மலரும்படிச் செய்யக்கூடாது? அப்படிச் செய்தால் தேனீக்கள் அங்கே தாமாக வந்து சேரும்” என்று என்னுடைய குருநாதர் சொல்வது வழக்கம்.
  • மற்றவர்களிடம் தீய தன்மை இருப்பதாக நீ உணராதே. தீய தன்மை பல்லினத்தாலும் அறியாமையாலும் ஏற்படுகிறது. மக்களிடம் நீங்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வதனால் என்ன நன்மை ஏற்படப்போகிறது?குறை கூறுவதனாலும் அழிவு முறையினாலும் எந்தவிதமான நன்மையும் ஏற்படப் போவதில்லை. இவற்றைவிட உயர்ந்தது எதையாகிலும் அவர்களுக்கு நாம் தர வேண்டும். அவர்களுடைய பெருமைக்கு உரிய இயல்பை, அவர்களுடைய பிறப்புரிமையை அவர்களிடம் எடுத்துச் சொல்.
  • நான் ‘சீர்திருத்தம்’ என்று சொல்லவில்லை. மாறாக ‘முன்னேறிச் செல்’ என்று சொல்கிறேன். இப்போது சீர்திருத்தம் செய்ய வேண்டிய அளவுக்கு எதுவும் கெட்டுவிடவில்லை.சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அனுசரித்து அமைத்துக் கொள்வதுதான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உரிய முழு ரகசியமாகும். இந்த உண்மை, வாழ்க்கை மலர்ச்சி பெறுவதற்கு அடிப்ப டையாக இருந்து பெரிதும் துணைபுரிகிறது. மாற்றிய மைத்துக் கொள்வதும், அனுசரித்துப் போவதும் அடக்கி அழுத்தி வைக்க முயற்சி செய்யும் புறச் சக் திகளை எதிர்த்துப் போராடுவதன் விளைவாகத் தோன்றுகின்றன. சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை நன்றாக அனுசரித்து அமைத்துக் கொள்பவன், நீண்ட காலம் வளமான வாழ்க்கை வாழ்கிறான். நான் இதை எடுத்துச் சொல்லாவிட்டாலும் சமுதாயம் மாறியபடி தான் இருக்கிறது. அப்படியே சமுதாயம் மாறித்தான் ஆகவேண்டும்.
  • அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. வளர்ச்சியடைவதுதான் வாழ்க்கை, அதாவது விரிவடைதல் அதுதான் அன்பாகும். எனவே அன்புதான் வாழ்க்கை ஆகும். அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் ஒரே நியதியாகும்.எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். இந்த உண்மை இம்மை மறுமையாகிய இரண்டு உலகங்களுக்கும் பொருந்தும். நன்மை செய்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம். இப்போது நாம் பார்க்கிற மக்களில் தொண்ணூறு சதவீதம் இறந்துபோனவர்கள். அவர்கள் பிசாசுகள்தாம். எனது அருமைக் குழந்தைகளே, அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருத முடியாது .
  • புதிய இந்தியா ஒரு புறம் சொல்கிறது: “மேலை நாட்டுக் கருத்துக்கள், மொழி, உணவு, உடை, நடைமுறைகள் ஆகியவற்றை நாம் பின்பற்றினால்தான், மேலை நாட்டினரைப் போன்று நாமும் உறுதியும் ஆற்றலும் ஆவோம். உடையவர்கள்மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது: “முட்டாள்கள்! மற்றவர்களுடைய கருத்துக்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதனால் ஒருநாளும் அவை ஒருவனுக்குச் சொந்தமாகிவிடா. உழைத்துப் பெற்றாலன்றி எதுவும் உனக்குச் சொந்தமாகி விடாது. புலியின் தோலைப் போர்த்துக்கொண்ட பசு, புலியாகிவிடுமா?”புதிய இந்தியா ஒரு புறம் சொல்கிறது: “மேலை நாடுகள் செய்வது நிச்சயம் சரியாகத்தான் இருக்கும். இல்லாவிட்டால் அவை எப்படி இவ்வளவு பெருமை உடையவையாக ஆகியிருக்க முடியும்?”மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது: ”மின்னலின் ஒளி மிகவும் நன்றாகத்தான் பிரகாசிக்கும். ஆனால் அது ஒரு கணம்தான். குழந்தைகளே! உங்கள் கண்களை அது கூசச் செய்வதைக் கவனியுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்!”
  • மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும்.ஆனால் அதன் அடியில் அழுகையும் புலம்பலும் மறைந்திருக்கின்றன. அதன் முடிவும் தேம்பியழுவ தாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமே வேடிக்கையும் விளையாட்டும் அங்குக் காணப்படு கின்றன. ஆனால் உண்மையில் அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது.மாறாக, இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளும் துயரமும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும் மகிழ்ச்சியும் மறைந்திருக்கின்றன.
  • ‘மக்கட்பேற்றாலோ செல்வத்தாலோ அல்ல; தியாகத்தால் மட்டுமே அமரநிலை அடையப்படுகிறது’ என்ற இந்த அறைகூவலை உபநிஷதங்கள் காலம் முதல் உலகிற்கு நாம் விடுத்து வந்திருக்கிறோம். வாழையடி வாழையாக, இனத்திற்குப் பின் இனமாக, பல இனங்கள் இந்த அறைகூவலை ஏற்றுக் கொண்டன. ஆசைகளை அடிப்படையாகக் கொண்டு,இந்த வாழ்க்கைப் புதிரைத் தீர்க்கத் தங்களால் ஆனவரையிலும் அவை முயற்சி செய்தன. ஆனால் அவை எல்லாம்தோல்வியையே அடைந்திருக்கின்றன.பழைய இனங்கள் எல்லாம் பொன்னாசை, அதிகார வெறி ஆகியவற்றின் விளைவாகிய கொடுமை, துன்பம் முதலியவற்றின் சுமை தாங்க முடியாமல் அழிந்தே போயிருக்கின்றன. புதிய இனங்களோ அதே சுமைகளால் இருக்கின்றன. தள்ளாடி விழும் நிலையில் இந்த நிலையில் வெற்றி பெறப்போவது அமைதியா, போரா? பொறுமையா, பொறுமையின்மையா? நன்மையா, தீமையா? தோள் வலிமையா, அறிவு வலிமையா? இலௌகிகமா, ஆன்மிகமா? வாழ்க்கைப் போராட்டத்தில் தப்பிப் பிழைக்கப்போவது எது என்ற கேள்விக்குப் புதிய இனங்கள் இனிமேல்தான் பதிலைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன .
  • ஆனால் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே நாம் நம்முடைய பிரச்னையைத் தீர்த்திருக்கிறோம். தீராத இந்தப் பிரச்னைக்கு நாம் அளித்த விடை, உலக ஆசை இல்லாமலிருத்தல் அதாவது தியாகம் என்பதுதான்.

என்றும் அன்புடன் :

பொன்னி சுதாகரன்,

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…

Leave a Reply