எண்கணிதம் தரும் அதிர்ஷ்டம்

எண்கணிதம் தரும் அதிர்ஷ்டம்


பொருளடக்கம் :

➢எண் கணிதம் அறிவோம்

➢பெயர்களுக்கு வசீகரிக்கும் சக்தி உள்ளதா?

➢எண்கணிதமும் அதன் வகைகளும்…!

➢ஆங்கில எழுத்துக்களுக்கு என்ளெள்ள எண்கள்?

➢எண்களும் கிரகங்களும்

➢நட்பும் பகையும்

➢எண் 1 சூரியன்

➢எண் 2 சந்திரன்

➢எண் 3 குரு

➢எண் 4 ராகு

➢எண் 5 புதன்

➢எண் 6 சுக்கிரன்

➢எண் 7 கேது

➢எண் 8 சனி

➢எண் 9 செவ்வாய்

➢பிறந்த தேதி பலன்கள்

➢12 மாதங்களில் பிறந்தவர்களின் பலன்கள்

➢பெயர் எண் அடிப்படையில் பலன்கள்

➢சிறப்பு விவரம்

➢அதிர்ஷ்ட வாகன எண் கணக்கிடும் முறைகள்

➢அதிர்ஷ்ட தொழில்கள்

➢உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் .

எண் கணிதம் அறிவோம் :

பிரபஞ்சம் என்பது எண்ணில் அடங்கா பல ரகசியங்களையும், விசித்திரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.உலகில் sher அனைத்து பொருட்களும் பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டவை. பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே எதையும் பகுத்தறிந்து செயல்படுத்தும் தன்மை கொண்டவர்கள்.

பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தும் பூமியை சுற்றியுள்ள நவகிரகங்களின் மூலமாக உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் அளிக்கப்படுகின்றது. இந்த பூமியில் உள்ள உயிரினங்களில் எதையும் பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட உயிரினம் மனித உயிரினம் ஆகும்.

உலகிலுள்ள மற்ற உயிரினங்களில் உள்ள அணுக்களில் கிரகங்களின் சக்திகள் இருப்பதை காட்டிலும், மனிதனின் உடலில் உள்ள அணுக்கள் யாவும் அந்த சக்திகளை தன்னகத்தே இழுத்துக் கொண்டு, அந்த சக்தியில் எதன் வலிமை அதிகமாக இருக்கின்றதோ? அந்த கிரகத்தின் குணங்களை அடிப்படையாக கொண்டு மனிதர்கள் இருக்கின்றனர்.

பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் சக்திகள் மனிதனின் உடலில் அதிகமாக ஈர்க்கப்படுகின்றன என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் கிரகங்களின் வலிமைக்கு ஏற்ப ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு எண்களை சூட்டினார்கள்.

இந்த எண்களின் மூலமாக ஒவ்வொருவரின் ஆன்ம சக்தியை அதிகரிக்க இயலும் வகையில் எழுத்துக்களுக்கும் எண்களை கொடுத்து, அவற்றின் மூலமாக கிரகங்களால் ஈர்க்கப்படும் சக்தியை அதிகப்படுத்திக் கொண்டிகுந்தார்கள்.

பண்டைய முறையில் தமிழ் எழுத்துக்களுக்கும், எண்கணித முறையானது இருந்து வந்தது. ஆனால் நாளடைவில் அம்முறையில் பல சிக்கல்கள் இருப்பதை உணர்ந்த பெரியோர்கள் சிலர் ஆங்கில எழுத்துக்கள் குறைவாக இருப்பதினால் அவ்வெழுத்துக்களுக்கும் எண்கணித முறையில் பலன் இருக்கின்றதா? என்பதை ஆராய்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

அதன்பின் ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றதை அடுத்து, நமக்கு அரிய பொக்கிஷமான எண்கணிதம் என்னும் நியூமராலஜி முறையை நம்மிடம் முன்னோர்கள் அளித்து சென்றுள்ளனர்.

எண்கணித முறையில் நம்முடைய எண்ணங்கள் யாவும் வெற்றி பெற வைக்க முடியுமா?

நம் ஒவ்வொருவரின் பெயரிலும் ஒவ்வொரு சக்திகள் இருக்கின்றன. அந்த சக்திகளை தகுந்த முறையில் மாற்றி கொள்வதன் மூலம் நாம் நினைக்கக்கூடிய எண்ணங்கள் மற்றும் செயல்கள் யாவும் எண்ணிய விதத்தில் செய்து முடிக்கக்கூடிய வல்லமையை அந்த பெயரும், அந்த பெயரை கொண்ட எண்கணிதமும் நமக்கு அளிக்கக்கூடியதாகும்.

மனதில் பலவிதமான எண்ணங்களையும், உருவாக்குபவையாக நம் பெயர்கள் இருக்கின்றன. செயல்பாடுகளையும்

ஏனெனில் நம் பெயரின் பலம் குறைந்து இருக்கும் பட்சத்தில், பெயர்களை உச்சரிக்க உச்சரிக்க நாம் எண்ணும் செயல்கள் யாவும் பலவீனப்பட்டு கொண்டே இருக்கும்.

ஒவ்வொருவரும் தனக்கு வைக்கப்பட்டுள்ள பெயரில் உள்ள எண்கணித வலிமையை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் தனது பெயரை மாற்றி கொள்வதன் மூலம், மனதில் எண்ணிய எண்ணங்களை செயல்படுத்தக்கூடிய வல்லமையை அந்த பெயரே உங்களுக்கு அளிக்கும்.

‘எண்ணும் எழுத்தும் திருந்த காரிய தடை அகலும்’

பெயர்களுக்கு வசீகரிக்கும் சக்தி உள்ளதா?

இவ்வுலகில் உள்ள அனைத்து பெயர்களும் ஏதாவது ஒரு சக்திகை வசீகரிக்கும் வல்லமையை கொண்டதாக அமைகின்றன.

பெயர்களில் உள்ள எழுத்துக்கள் மற்றும் எழுத்துக்களில் உள்ள எண்களின் வலிமையும், சரியான முறையில் அமையும் பட்சத்தில், அந்த எழுத்துக்கள் யாவும் கொண்ட பெயர்கள் சகல சௌபாக்கியங்களையும், அவர்களுக்கு அளிக்கக்கூடிய சக்தியை கொண்டிருக்கும்.

மனிதர்களுக்கு சூட்டும் பெயர்களுக்கு மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளுக்கு வைக்கும் பெயர்களுக்கும் வசிய சக்திகள் இருக்கின்றன. நாம் மேற்கொள்ளும் தொழில் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அந்த தொழிலுக்கு உண்டான பெயருக்கு ஏற்ப வலிமையையும், லாபங்களையும், செல்வாக்கையும் அளிக்கக்கூடியதாகும்.

எந்த தொழில் செய்தாலும் நாம் மேற்கொள்ளும் தொழிலுக்கு வைக்கப்படும் பெயருக்கு வசிய சக்திகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அந்த தொழிலை மேற்கொள்வதால் வெற்றிமேல் வெற்றியையும், செல்வாக்கையும், செல்வ செழிப்பையும் அத்தொழில் நமக்கு அமைத்துக் கொடுக்கும்.

எண்கணிதமும் அதன் வகைகளும்..!

எண்கணிதம், உலகில் உள்ள பல நாடுகளில் மாறுபட்ட விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக,

அமெரிக்காவில் எண்கணிதம் முறை, ஒலியியல் முறை,ஹீப்கு டாரட் பித்தாகரஸ் முறை மற்றும் இன்னும் பல முறைகளில் எண்கணிதமானது மாறுபட்ட வடிவங்களில் இன்றனவும் பயன்படுத்தப்படுகின்றன.

எண்கணித முறைகள் அனைத்தும் அனுபவ ரீதியாக பல பெயர்களை ஆராய்ச்சி செய்தும், பலரின் வாழ்க்கை குறிப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை கொண்டும் ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டமான பெயர்களும், அவர்களின் குணங்களும், நாம் வைக்கும் பெயரிலுள்ள அர்த்தங்களும், அதில் பொதிந்து இருக்கக்கூடிய பொருள்களும், நம்மை இந்த பிரபஞ்சத்தில் அறிமுகப்படுத்தி கொள்வதற்கான தூண்டுகோலாக அமைகின்றது.

நாம் வைத்த பெயரை மற்றவர்கள் உபயோகிக்கும் பொழுதும் அல்லது அழைக்கும் பொழுதும் நம்மை அறியாமல் இந்த பிரபஞ்ச சக்தியை நம்முள் எடுத்துக் கொள்ள துவங்குகின்றோம்.

அப்பெயரானது நேர்மறை சக்தியை உள்ளே இழுக்கும் வல்லமையை கொண்டிருந்தால் நாம் சுறுசுறுப்புடனும், வல்லமையுடனும் செயல்படுவோம்.

ஒருவேளை எதிர்மறை எண்ணங்களை அளிக்கக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் நாம் சோர்வுடன் செயல்படுவோம்.

ஆகவே, ஒரு பெயரை நம் குழந்தைகளுக்கு வைக்கும் பொழுது, அப்பெயரில் உள்ள பொருள்களை அறிந்தும், அவை நேர்மறையான அல்லது எதிர்மறையான பொருள் உடையதா? என புரிந்து பெயர் வைத்தால், குழந்தைகளுக்கு அறிவாற்றல் மற்றும் அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக அமையும்.

ஆகவே, பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு பெயரிடும் பொழுது சற்று கவனத்துடன், பெயரின் பொருளை அறிந்து வைத்தால் குடும்பத்திற்கு சுபிட்சம் உண்டாகும்.

உதாரணமாக, பெயர்களும், அதற்கான பொருளும், அப்பெயர் தரும் ஆற்றலும் கொடுக்கப்பட்டுள்ளது.

வர்ஷா – செல்லும் இடங்கள் யாவும் மரியாதையும், செல்வாக்கும் கிடைக்கும்.

ஹரிணி -மகிழ்ச்சியான வாழ்க்கை அமையப் பெற்றவர்கள்.

ஹரிதா – தன்னம்பிக்கையும், தைரியத்துடனும் செயல்படக்கூடியவர்கள்

சினேகா -அழகும், செல்வமும் கொண்டவர்கள்.

நிவேதா – எதையும் நேர்மறை எண்ணங்களுடன் சந்திக்கக்கூடியவர்கள்.

முகிலன் – எதிலும் வெற்றிவாகை சூடக்கூடியவர்கள்.

ஜெயவர்மன் – ஆளும் திறமையை கொண்டவர்கள்.

ராகும் – செல்வாக்கு நிரம்பியவர்கள்.

ஆங்கில எழுத்துக்களுக்கு என்னென்ன எண்கள்?

எழுத்துக்களுக்கான எண்களை நிர்ணயிக்கும்போது ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்துவது இன்று வழக்கத்தில் இருக்கிறது.

ஏனெனில் ஆங்கில மொழி உலகளாவிய மொழியாதலால் ஆங்கில எழுத்துக்களையே எண்கணித சாஸ்திரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். எனவே, ஆங்கில எழுத்துக்களுக்கு என்ளென்ன எண்கள் உள்ளன? என்பதை பற்றி பார்க்கலாம்.

எழுத்துக்கள்

மதிப்பு எண்கள்

A-I-J-Q-Y

1

B-K-R

2

C-G-L-S

3

D-M-T

4

E-H-N-X

5

U-V-W

6

O-Z

7

F-P

8

எழுத்துக்கள் இல்லை

9

 

மேற்கூறிய அட்டவணையை எப்பொழுதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் ஒருவருக்கு பெயரிடும் பொழுது ஒவ்வொரு எழுத்துக்களுக்கான மதிப்புகளை அறிந்தால் மட்டுமே, நம்மால் அப்பெயரில் உண்டாகும் பலன்களையும், விவரங்களையும் அறிந்து அதற்கு தகுந்தாற்போல பெயர்களில் சில மாற்றங்களையும் செய்ய இயலும்.

எண்களும் கிரகங்களும் :

எந்தெந்த எழுத்துக்கள் எந்தெந்த எண்ணின் ஆளுமைக்கு உட்பட்டது என அறிந்து கொண்டால், கிரகங்களின் பலத்தையும், எண்களின் பலத்தையும், நட்பு பகையையும் அறிய முடியும்.

எண்

ஆட்சி கிரகம்
1

சூரியன்

2

சந்திரன்

3

குரு

4

இராகு

5

புதன்

6

சுக்கிரன்

7

கேது

8

சனி

9

செவ்வாய்

 

நட்பும் பகையும் :

மனித வாழ்க்கையில் ஒரு காரியத்திற்கு தடையை ஏற்படுத்த சில காரணங்களும், எதிரிகளும் இருப்பது போல, எண்களிலும் எண்களின் பலத்தை குறைத்து நற்பலன்களை தடுத்து நிறுத்தக்கூடிய எண்களும் உள்ளன.

நட்பு பகை எண்களை அறிந்து கொள்வதன் மூலம் ஒருவருக்கு பெயர் வைக்கும் பொழுது பலவிதமான நன்மைகளையும், அனுகூலமான வாய்ப்புகளையும் நம்மால் உருவாக்க இயலும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணையை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வது அவசியமாகும்.

எண்

ஆட்சி கிரகம்

நட்பு எண்கள்

பகை எண்கள்

1

சூரியன்

1-4

8

2

சந்திரன்

2-7

8-9

3

குரு

3-9

6

4

இராகு

4-1

8

5

புதன்

5-9

6

6

சுக்கிரன்

6-9

3-5

7

கேது

7-1-2

8

8

சனி

5-6-4-9

8

9

செவ்வாய்

9-3-5-6

2

 

எண்கணிதத்தின் அடிப்படையில் பெயர் வைக்கும் பொழுது சில குறிப்புகளை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் பெயர் வைக்க வேண்டும்.

மனிதர்களாக இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களையும் மூன்று எண்கள் மட்டும் தங்களுக்கு பிடித்த விதத்தில் ஆட்டி வைக்கின்றன.

இந்த மூன்று எண்களில் உள்ள இரண்டு எண்களை நம்மால் எவ்விதத்திலும் மாற்ற இயலாது. ஆனால், ஒரு எண்ணை மற்றும் நமக்கு பிடித்தார் போல மாற்றி அமைக்கக்கூடிய சூழலையும், வாய்ப்புகளையும் இறைவன் நமக்கு அளித்துள்ளார்.

இந்த உலகில் நம்மை ஆட்டுவிக்கும் அந்த மூன்று எண்கள் என்னென்ன? என்பதை பற்றி பின்வரும் பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.

1. பிறந்த தேதி எண்

2. கூட்டு எண்

3. பெயர் எண்

இந்த மூன்று எண்களில் பிறந்த தேதி எண் மற்றும் கூட்டு எண்களை நம்மால் மாற்ற இயலாது. ஆனால்,பெயர் எண்ணை இந்த இரண்டு எண்களுக்கும் நட்பு விகிதத்தில் வரும்படி அமைத்துக் கொள்ளலாம்.

எண்கணிதத்தை ஜாதகத்தின் அடிப்படையில் கட்டமைத்து கொள்வதன் மூலம் வளமான எதிர்காலத்தை நம்மால் உருவாக்க இயலும்.

பிறந்த தேதி என்:

ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் மட்டும் கூறுவது பிறந்த எண் அல்லது பிறவி எண் அல்லது உடல் எண் என்று அழைக்கப்படுகின்றது.

பிறந்த தேதி எண் அடிப்படையில் ஒருவருடைய குணம், ஆசைகள் மற்றும் செயல்பாடுகளை மாற்றி கொள்ள இயலும்.

கூட்டு எண் :

ஒருவர் பிறந்த தேதி, மாதம்,வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற எண்ணே கூட்டு எண் அல்லது உயிர் எண் என்று அழைக்கப்படுகின்றது.

கூட்டு எண் மூலம் எதிர்காலம் தொழில் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள இயலும்.

பெயர் எண்:

ஒருவருடைய பெயரில் வருகின்ற அனைத்து எழுத்துக்களின் மதிப்பெண் அடிப்படையில் அமைவது பெயர் எண் ஆகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு எண்களில் எந்த எண் பலம்பெற்று உள்ளதோ? அந்த எண்ணிற்கு நட்பின் அடிப்படையில் நாம் பெயரை வைத்துக் கொள்வதன் மூலம் நம்மால் அதிர்ஷ்டத்தை உருவாக்க இயலும்.

மேலும், நாம் வைக்கக்கூடிய பெயரின் எண்ணிற்குரிய கிரகமானது ஜாதகத்தில் வலுப்பெற்ற நிலையில் இருக்கும்பொழுது, அவர் என்றென்றும் வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் பெறக்கூடிய வெற்றி நாயகனாகவே திகழ்வார்.

உதாரணமாக,

ஒருவர் 12-11-1990ல் பிறக்கின்றார் என வைத்துக்கொள்வோம்.

இதில் பிறந்த தேதி எண் என்பது,

<-1+2

– 3 (3 என்பது பிறந்த தேதி எண் ஆகும்)

இதில் கூட்டு எண் என்பது,

-1+2+1+1+1+9+9-0

-24 (24)

-6 (இதில் 6 என்பது கூட்டு எண் ஆகும்)

இதில் பெயர் எண் என்பது A. K. KAMARAJ

1+2+2+2+4+1+2+1+

-15

இங்கு 15 என்பது பெயர் எண் ஆகும்.

எண் 1 சூரியன்

நாம் வாழும் உலகமும் ஒன்று. நம் உலக மக்களை நல்வழியில் கொண்டு ஆட்சி புரியும் அரசனும் ஒன்று. அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமான மற்றும் சக்தி ஒளி வடிவமான சூரியனும் ஒன்று.

ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்று என்னும் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

குணநலன்கள் :

கய முயற்சியால் உயர்வு அடைவார்கள்.

வசீகரமான முகத்துடனும், கம்பீரமான தோற்றத்துடனும் காணப்படுவார்கள்.

துணிவுடன் முன்னேறி வெற்றி அடைவார்கள்.

இவர்கள் யாரையும் தேடி போவது இல்லை.

ஆன்மிக பணிகளில் அதிகம் ஈடுபடுவார்கள்.

நம்பிக்கை துரோகம் செய்தால் அவர்களை சிறிதளவும் மன்னிக்க மாட்டார்கள்.

மிகப்பெரிய விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.

நாகரீகமான எல்லா பொருட்களையும் வாங்கி வைத்து வீட்டை அலங்கரிப்பார்கள்.

எப்போதும் தூய்மையை விரும்பக்கூடியவர்கள்.

இயற்கை காட்சிகளில் மனதை பறிகொடுத்து மகிழ்வார்கள்.

எந்தவொரு சூழ்நிலையிலும் கலபமாக மற்றவர்களுக்கு கீழ்ப்படிய மாட்டார்கள்.

தோல்வியை கண்டு ஒருபோதும் கலங்க மாட்டார்கள்.

உணர்ச்சிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு ஆற்றல் நிரம்பியிருக்கும்.

உலகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைக்கூட தெரிந்து வைத்திருப்பார்கள்.

இவர்களுடைய மிகப்பெரிய ஆயுதம் என கருதப்படும் ஒரு விஷயம் இவர்களின் ‘தனிமை’.

தனிமையில் இருக்கும்போது இவர்களுக்கு ஏற்படும் ஞாளம் வலிமையானது. மிக

இவர்களுக்கு பின்னால் மிகப்பெரிய ஒரு மக்கள் பலம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

உத்தியோக வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பார்கள்.

அரசியலில் இவர்களுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கும்.

எவ்வளவு பெரிய பதவியில் இருப்பினும் தனது மேல் அதிகாரிகள் சிறிது மரியாதை குறைவுடன் நடந்து கொண்டால் உடனே அப்பதவியை ராஜினாமா செய்து விடுவார்கள்.

இவர்களுக்கு அரசியலில் நாட்டம் உள்ளதால் புதிய கொண்டுவந்து நிலை நாட்டுவார்கள். சட்டங்களை

இவர்கள் புகழின் உச்சத்திற்கு செல்லும் வரை அயராது உழைப்பார்கள்.

தனக்கு எதிரியாய் இருப்பவர்களை நண்பர்களாக்கி கொள்வார்கள். கூட தன் பேச்சாற்றலின் மூலம்

இவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் மீது பேராசை கொள்ள மாட்டார்கள்.

மற்றவர்களின் ஆசைப்படமாட்டார்கள். பணத்திற்காகவும், பதவிக்காகவும் எப்போதும்

இவர்கள் ஒரு துறை மட்டுமின்றி பல துறைகளில் வெற்றி பெற்று புகழுடன் விளங்குவார்கள்.

கலை சார்ந்த துறைகளை தேர்ந்தெடுத்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும்.

மற்றவர்கள் கூறும் அறிவுரைகளை நன்கு ஆராய்ந்து அதில் தனக்கு எது தேவை என்பதை மட்டும் ஏற்றுக் கொள்வார்கள்

தந்தை வர்க்கத்தினரின் ஆதரவு சிறப்பை தரும்.

தத்துவத்தின் ஆழம் கண்டவர்கள்.

பொருளாதார சிக்கல் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க உடனே இவர்களுக்கு பணம் வந்து சேரும்.

எந்தவொரு செயலிலும் உள்ள சூட்சமத்தை அறிந்து அதை பின்பற்றி அந்த செயலை மிக விரைவாக செய்து முடிப்பார்கள்.

எந்தவொரு செயலை மேற்கொள்ளும்போதும் அதில் தனக்கு என்ன ஆதாயம் உண்டு? என்பதை பார்க்காமல், மற்றவர்களுக்காக அந்த செயலை செய்து முடிப்பார்கள்.

தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவார்கள்.

படிப்படியாய் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

தான் மேற்கொள்ளும் செயல் வெற்றி பெறும் வரை யாருக்கும் அதை பற்றிய செய்தியை சொல்ல மாட்டார்கள்.

எழுத்தாற்றல் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தான் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவார்கள்.

இளமையிலேயே தனக்கென்று ஒரு தனி பாதை வகுத்து அதில் செயல்படுவார்கள்.

பல புதிய விஷயங்களை கண்டுபிடிப்பதில் இவர்களுக்கு ஆர்வம் மிகுந்து இருக்கும்.

பிறருக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை சொன்னப்படி காப்பாற்றுவார்கள்.

எந்தவொரு இடத்திலும் யாருக்காகவும் பயம் கொள்ளாமல் தன் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்.

உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னிடம் உள்ளதை தாராளமாக கொடுத்து உதவுவார்கள்.

என்றும் அன்புடன் :

S.சுதாகரன்

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…

Leave a Reply