செவ்வாய் தோசத்தின் அறிவியல் உண்மைகள்

செவ்வாய் என்பது நமது உடலில்உள்ள இரத்தத்தை குறிப்பதாகும்.நமது இரத்தத்தில் ஆண்டிஜென் ,ஆண்டிபாடி எனும் இரு பகுதிகளின் கலவையாகும்.இங்கு ஆண்டிஜென் நுண்கிருமி ஆகும்.இது உடலுக்கு நல்லதல்ல.

உலகிலே ஆண்டிஜென் இல்லாத ஒரே பொருள் தாயின் பால் ஆகும்.எனவே தாய் பாலை அருந்திய குழந்தைகள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடையவர்களாக உள்ளார்கள்.மற்றொன்று ஆண்டிபாடி ஆகும்.ஆண்டிபாடி என்றாலே “எதிர்ப்பு சக்தி” என்று பொருள்.இது இரத்தத்தில் மிகுதியாக இருப்பது நல்லது.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

செவ்வாய் தோஷம் அறிவியல்

தோஷம் உள்ளவர்களது இரத்தத்தில் இந்த ஆண்டிஜென் எனும் நுண்கிருமி அதிகமாக இருக்கும்.இந்த கிருமிகளை எதிர்க்கும் சக்தியான ஆண்டிபாடியும் அவர்களது இரத்தத்தில் அதிகப்படியாக இருப்பதால் அது அவர்களை பாதிக்காது.

மேலும் படிக்க : சந்திராஷ்டமம் பயம் தவிர்த்து ஜெயம் பெற

ஆனால் அதே நேரத்தில் தோஷம் இல்லாதவர்களை மணக்கும்போது இந்த நுண்கிருமிகள் செவ்வாய் தோஷமில்லாதவர் உடலில் நுழைந்து நாளுக்குநாள் உடல் மெலிந்து நோயாளியாவர்.

நம் முன்னோர்கள் மணிக்கணக்காக, நாட்கணக்காக,மாதக்கணக்காக,வருடக்கணக்காக வானத்தை பார்த்திருந்து கிரகங்களின் அசைவுகளை கண்டறிகிறார்கள்.அவர்கள் தந்த அற்புத அறிவியல் ஜோதிடம்

ஒவ்வொரு மனிதனின் இரத்தக் கூறுகள் வேறுபடுகின்றன. இந்த இரத்த வேறுபாட்டை கைநாடியை வைத்து கண்டறிய முடியும்.

சில ஆண்களின் இரத்தம் சில பெண்களின் இரத்ததுடன் ஒத்துப் போவதில்லை. இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கும்,தாய்க்கும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குழந்தைகள் குறையுடனும் அல்லது இறக்கவும் செய்கிறது. நம் காலத்தில் திருமணத்திற்கு முன்னர் இவற்றை பார்ப்பதில்லை.

திருமணத்தின் பின்னர் ஏற்படும் சிக்கல்களை அறிந்த பின் பொருந்தாத இரத்தக் கூறு என்பதை வைத்தியர் கண்டறிகிறார். அதற்கு சிக்கிச்சையும் செய்கிறார். இன்றைய மருத்துவ உலகு என்ன சொல்கிறது?

மேலும் படிக்க : ராசியை போல கரணமும் முக்கியம்

அறிவியல் விளக்கம்

இரத்தப்பிரிவு A,B,AB,O என்பது நீங்கள் அறிந்ததே..

இரத்தத்தில் Rhesusfactor – உள்ள பெண் திருமணம் செய்யு முன் மருத்துவரின் அறிவுரையை பெற்றுக் கொள்வது சிறந்தது.

நோய்களுக்காக மட்டுமல்லாது, RH பிரிவு பற்றியும் அறிந்து, கருத்தரித்த காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வும் காணலாம். Rh – உள்ள பெண்ணின் குழந்தை Rh+ ஆக இருக்குமிடத்து பல பிரச்சனைகளை உருவாக்கும்.

அநேகமாக முதல் முறை கருத்தரித்த காலத்தில் தாய்க்கு பிரச்சனைகளை தராத போதும், பின்னர் கருத்தரிக்கும் காலத்தில் தாய்க்கோ,பிள்ளைக்கோ ஆபத்து ஏற்படலாம்.கூடவே Rh நோயையும் குழந்தைக்கு ஏற்படுத்தலாம்.

இன்றைய வைத்தியர்களால் கண்டறியப்பட்ட, இந்த இரத்த ஒவ்வாமையை, நம் முன்னோர்கள் சோதிடர்கள் ஜோதிட நூல்களில்  செவ்வாய் தோஷம் பற்றி முன்பே விவரிக்கப்பட்டு உள்ளது  இவ்விஷயத்தை அறிவியல் ரீதியாகவும் பார்க்க வேண்டும்.

பொதுவாக செவ்வாய் இரத்தத்திற்கு உரிய கிரகம். ரத்த அணுக்களுக்கு உரிய கிரகம்.ஒரு சொட்டு விந்தணுவுக்கு 100 சொட்டு இரத்தம் எனக் கூறப்படுகிறது.

எனவே, உடல் உறவுக்கு உரிய கிரகமாகவும் செவ்வாய் பார்க்கப்படுகிறது. எனவே ஒருவரது உடல் உறவின் தன்மையை அல்லது காமத்தின் தன்மையை நிர்ணயிக்கக் கூடியதும் செவ்வாய்தான்.

மேலும் படிக்க : பௌர்ணமி விரதமும் அம்மன் வழிபாடும்

தாம்பத்ய வாழ்க்கை

தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக,  தோஷம் உள்ள பெண்ணிற்கு,  தோஷம் உள்ள ஆடவனை திருமணம் செய்து வைக்கக் கூறுகிறோம்.

திருமணம் என்பது ஆணையும், பெண்ணையும் உடல் ரீதியாக சேர்த்து வைத்தல். அதற்கடுத்தது குழந்தை பாக்கியம், மகிழ்ச்சி, வளமான வாழ்க்கை உள்ளிட்டவை இடம்பெறும்.

இதில் தாம்பத்தியத்தில் ஒருத்தருக்கு திருப்தி கிடைத்து மற்றவருக்கு திருப்தி கிடைக்காமல் போனால், ஏமாற்றமடைந்தவர் மற்றொரு துணையைத் தேடுவது போன்ற சிக்கல் ஏற்படும்.

எனவே, இதுபோன்ற முரண்பாடுகள் உருவாவது எதில் என்று பார்த்தால், தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்யும் தருணங்களில் இது அதிகளவு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே தோஷம் உள்ளவர்களை, தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்ய வலியுறுத்துகிறோம்.

இதேபோல் ரத்தத்தில் ஆர்.ஹெச் பேக்டர் (RH Factor) என்ற தன்மையும் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், அந்த தோஷம் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும். இதனால் தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் இல்லாதவரை திருமணம் செய்து வைப்பதால் குழந்தை பாக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும்.

நேரடியாக உங்கள் மருத்துவரிடம் இரத்தப் பரிசோதனை செய்து RH factor,இரத்த ஒவ்வாமை(தோஷம்!)பற்றி தெரிந்து கொண்டு, அந்த இரத்தப் பிரிவிற்கு ஏற்ற ஆணையோ பெண்ணையோ மணம் செய்து கொள்ளலாம்.

இது கட்டாயமானதாக இல்லாவிட்டாலும் கூட பிரச்சனைக்கு மருந்தை தேடுவதை விட,பிரச்சனையை முதலிலேயே தீர்த்துக் கொள்வதே சிறந்ததாகும். சோதிடம் சொல்லும் தோஷம் என்பது, மருத்துவ அறிவியல் உண்மைகள்

மேலும் படிக்க : பௌர்ணமி திதியும் பலனளிக்கும் பரிகாரமும்

செவ்வாய் பகவான் வரலாறு

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன்.

வரம்

எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான்.

பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.

வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான்.

அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.

ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரு வருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது.

மேலும் படிக்க : சித்தர்கள் ரகசியமும் மனிதனின் அறிவும்

போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன.

அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது.

இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிவபெருமானும் செவ்வாய் கிரகமும்

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும். பூமாதேவியினால் வளர்க்கப்பட்டவன் செவ்வாய் (தரணீ கர்ப்ப சம் பூதம்) என விளக்குகிறார் ஸ்ரீ வியாச பகவான்.

பரத்வாஜ முனிவரின் கருணையினால், அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்குச் சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.செந்நிறத்தில், கொழுத்து விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பைப் போல் ஜொலிப்பதால், செவ்வாய் என்று பெயரை அடைந்தான்.

கிரேக்க பாசையில் மாஸ் எனப் போற்றப்பட்ட இக்கிரகம் நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம் பராக்கிரமம், வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம், ஆண்மை போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம்.

மேலும் படிக்க : கும்பகோணம் பற்றிய அறிய ரகசியங்கள்

போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, அதிகார பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றிற்கான அதிபதி செவ்வாய்.

நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான ஆண்மை, வீரியம், உடல் உறவு போன்ற விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். போட்டி, பந்தயங் கள், உடல் திறன், வீரதீர செயல்கள்.

சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ் பெறவும், ரியல் எஸ்டேட், பில்டிங் காண்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் பணி, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருட் கடாட்சம் அவசியம் தேவை

 செவ்வாய் தோஷம்

தோஷம் குறித்து ஜோதிட நூல்களில் பல்வேறு கோணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது .செவ்வாய் 1,2,4,7,8,12–இல் இருந்தால் தோசம் என்று சொல்ல படுகிறது. இதில் லக்னம்,ராசி,சுக்கிரன் இம்மூன்று கிரகங்களுக்கும் பார்க்கப்பட வேண்டும் என்று ஜோதிட நூல்களில் கூறப்படுகிறது.

செவ்வாய் நெருப்பின் தன்மை கொண்டது .எனவே செவ்வாய் 2-ம் இடத்தில் இருந்தால், ஏழாம் பார்வையாக 8-ஆம் இடத்தை பார்க்கப்படும் .8-ஆம் இடம் என்பது மனிதருடைய உந்திகமல ஸ்தனமாகும் .இந்த உந்திக்கமலத்தில் இருந்துதான் ஒருவருக்கு ஆரோக்கியமும் ,ஆரோக்கிய குறைவும் எற்படுகிறது.

செவ்வாய் 8-ல் இருந்தாலும், 2-ல் இருந்து 8-ஆம் இடத்தைப் பார்த்தாலும்,உடம்பில் அதிக உஷ்ணம் உண்டாகி அதிக உடல் உறவில் ஈடுபடவைக்கும்.அதனால் தானும் கெட்டு கணவனுக்கோ ,மனைவிக்கோ இந்த உஷ்ணம் (உடலுறவு மூலம்) பரவி ஆரோக்கியத்திற்கும் ,ஆயுளுக்கும் கெடுதல் உண்டாக்கும்.

அடுத்து 7-ஆம் இடம் மர்ம ஸ்தானம் என்பது, இந்த ஸ்தானத்தை பார்த்தாலும், அதில் இருந்தாலும் உஷ்ணதோசம் ஏற்பட வாய்ப்புள்ளது, என்று கருதி 7-ஆம் இட செவ்வாயும் தோசம் செய்யும் என்றார்கள்.

4-ஆம் இடச் செவ்வாய் 4-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தோஷம் என்றார்கள் .4-ஆம் இடம் என்பது உடல் சுகஸ்தானம்,ஆகவே உஷ்ணம் ஏற்பட வாய்புள்ளது .அதனால் செவ்வாய் 4-ஆம் இடத்தில் இருப்பதும் குற்றம் என்றாகிறது.

செவ்வாய் 12-ஆம் இடத்தில் இருந்தாலும் தோசம் என்று கூறியது. ஏனெனில், 12-ஆம் இடம் என்பது போகஸ்தானம் என்பதால் இதுவும் மர்ம ஸ்தானத் தன்மை உடையது .12- ல் இருக்கும் செவ்வாய் 7ஆம் இடத்தை பார்க்கும் என்பதால் தோசம் என்று கூறபடுகிறது .

சொல்லிய 1, 2, 4, 7, 8, 12 -இல் செவ்வாய் தோசம் என்று கூறியதின் உட்கருத்து.மேலே உள்ள இடங்களில் இருக்கும் செவ்வாய் உடம்பில் அதிக உஷ்ணத்தை உண்டாக்கும் தன்மை உடையது .அதனால் இத்தோசம் இருவருக்கும் இருந்தால் நல்லது என்றனர்.

அதிக உஷ்ணம்

இருவருக்கும் இத்தோஷம் இருப்பின் இருவருடைய உடல் அமைப்பின் தன்மையில் சம அளவான உஷ்ணமோ அல்லது ஆணுக்குச் சற்று அதிக உஷ்ணம் இருப்பது, பெண்ணுக்கு அதை விட சற்று குறைவான உஷ்ணம் இருப்பது ,ஒருவரை ஒருவர் கெடுக்க இயலாது என்ற கருத்தில் செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் வேண்டும் என்ற கருத்தைக் சொன்னார்கள் .

ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம். இதற்கேற்ப 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகங்கள் இரண்டை சேர்ப்பதன் மூலம், தோஷம் சமன் அடைகிறது.

பெரும்பா லான ஜாதகங்களில் அதாவது 90 சதவிதத்திற்கு மேல் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும்.

தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக செவ் வாய் தோஷம் அறவே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்து தோஷ நிவர்த்தி ஆகி இருந்தால், அதே போல் 2, 4, 7, 8, 12ல் உள்ள ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டும். 1, 3, 5, 6, 9, 11ல் செவ்வாய் உள்ள ஜாதகத்துடன் சேர்க்க கூடாது.

செவ்வாய் தோஷ நிவர்த்தி

1.செவ்வாய் தனது சொந்த வீடான மேஷம் ,விருச்சிகம் ராசியில் ஆட்சிபெற்று அல்லது மகரத்தில் உச்சம் பெற்று இருந்தால் தோஷம் இல்லை.

·2.சிம்மம் (அ) கடக லக்னத்தில் ஜனனம் ஆனவர்களுக்கு,செவ்வாய் எங்கு இருந்தாலும் தோஷம் கிடையாது.

3.தனுசு,மீன ராசியில் இருந்தாலும் தோசம் கிடையாது.

4. குரு,சனி இவர்களுடன் இருந்தோ(அ) பார்க்கப் பட்டாலோ தோஷம் கிடையாது.

5.சூரியன்,சந்திரன் பார்த்தால் தோஷம்  இல்லை.

6.ஆட்சி,உச்ச நிலையில் இருந்தால் தோஷமில்லை என்பதன் அடிப்படைக் காரணம் என்ன என்பதை நோக்குமிடத்து, கிரகங்கள் பாபியாயினும், தன்னுடைய சுபஷேத்திரத்தில் இருக்கும்போது பாபதன்மை குறைந்து, சுபதன்மை கூடிவிடுவதால் நற்செயல் புரியும் வாய்ப்புகள் அதிகம்.எனவே இது தோசம் இல்லை என்று கூறினர்.

7.குரு பவான் வீடாகிய தனுசு ,மீனம் இவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை என்பதின் காரணம், குருவின் வீடு நல்ல குளிர்ச்சி பொருந்திய இடமாகும் .செவ்வாய் உஷ்ணதன்மை உடைய கிரகம் .அது குளிர்ச்சியான இடத்தில் இருக்கும்போது உஷ்ணதன்மை மாறிவிடும் என்பதால் தோச நிவர்த்தி என்று கூறினர்.

8.அதுபோல குரு பார்த்தாலும் தோசம் இல்லை என்ற கருத்தும்,குளிர்ச்சியான கிரகம் என்றதால் ஏற்பட்டது .ரிஷபம்,கன்னி என்ற இரண்டு ராசிகளும் நீர் தன்மை உடையது .இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தாலும் தோசம் நிவர்த்தி ஆகிறது .

9.மகரமும் நீர் ராசி என்பதால்,செவ்வாய் தோசம் நிவர்த்தி ஆகிறது.

10.மேஷம் ,விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு தோசம் இல்லை, காரணம் லக்னாதிபதியாக வரும் கிரகம் சாதகருக்கு நன்மைதான் செய்வார் என்பதால் தோசம் இல்லை.

11.மேலும் சூரியன்-சந்திரன் இரண்டும்,செவ்வாய் இருக்கும் இடத்தை பார்த்தால் தோசம் இல்லை.காரணம் சூரியனும்-சந்திரனும்,இறைவன்-இறைவி என்று கருதப்படுகிறது.

12.குரு,சுக்கிரன்,புதன் இவர்களால் நீக்க இயலாத தோசத்தையும் சூரியன் -சந்திரன் இவர்களால் நீக்க முடியும் .எனவே செவ்வாய்,சூரியன் -சந்திரன் பார்வை பெறுவது தோச நிவர்த்தி ஆகிறது.

13.இதுபோன்று செவ்வை தோச அமைப்பை ஆய்வு செய்து தோச தன்மை குறைந்து,சுபதன்மை கூடியிருக்கிறதா? என்பதை அறிந்து முடிவு எடுப்பது சாலச் சிறந்தது .

செவ்வாய் தோஷம் பரிகாரங்கள்

இப்படி தோஷம் உள்ள ஜாதகர்கள் என்ன விதமான பரிகாரங்கள் செய்யலாம்
அதாவது நான் பரிந்துரைக்கும் பரிகாரங்கள் பஞ்சபூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை,
மேஷம், சிம்மம், தனுசு:- நெருப்பு ராசிகள்
ரிஷபம், கன்னி, மகரம்:- நில ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம்:- காற்று ராசிகள்
கடகம், விருச்சிகம், மீனம்:- நீர் ராசிகள்.

ஆக செவ்வாயானது, நெருப்பு ராசியில் நின்று தோஷத்தைத் தந்தால் ஆலயத்தில் விளக்கேற்றி தீப வழிபாடு செய்து வாருங்கள். அது ஒன்றே போதும்…விரைவில் தோஷ நிவர்த்தியாகிவிடும்!
செவ்வாயானது, நில ராசியில் நின்று தோஷத்தைத் தந்தால், அவரவர் நட்சத்திரங்களுக்கு உண்டான மரம் வளர்த்தல், அல்லது கோயிலில் உள்ள ஸ்தல விருட்சங்களுக்கு தண்ணீர் விட்டு வழிபடுதல் முதலானவை தோஷ நிவர்த்திக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க : உங்கள் லக்கினமும் தொழில் லாபமும்

முருகனின் கந்த சஷ்டி கவசம்

செவ்வாயானது, காற்று ராசியில் இருந்து, தோஷத்தைத் தந்தால், முருகனின் கந்த சஷ்டி கவசம், சண்முகக் கவசம், துர்கை கவசம், துர்கை அஷ்டோத்ரம் முதலானவற்றைப் படித்து வர, செவ்வாயால் உண்டான தோஷம் நிவர்த்தியாகி விடும் என்பது உறுதி!

செவ்வாயானது, நீர் ராசியில் இருந்து தோஷத்தைத் தந்தால். இறைவனுக்கு நடத்தப்படும் அபிஷேகப் பொருட்களான பால், பன்னீர், தேன், சந்தனம், இளநீர் அல்லது கோயில்களில் விளக்கேற்ற நல்லெண்ணெய் ஆகியவற்றை வழங்கி பிரார்த்திக்கலாம்.இவற்றாலும் தோஷங்கள் சீக்கிரமே நிவர்த்தியாகும்!

செவ்வாய் கிரகமும் தானமும்

செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதுநல்லது.

எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

செவ்வாய் தசையில் செவ்வாய் புத்தி நடப்பவர்கள்:
“சூரிய காயத்ரி”-ஜபித்து வரவும், கதிரவனை வழிபட்டு வரவும்.
செவ்வாய் தசையில் ராகு புத்தி நடப்பவர்கள்:
ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வரவும்.
செவ்வாய் தசையில் குரு புத்தி நடப்பவர்கள்:
பிரதோஷ வழிபாடு செய்யவும்.
செவ்வாய் தசையில் சனி புத்தி நடப்பவர்கள்:
நீலகண்டர் “திரிசதி”-யை பாராயணம் செய்து வரவும்.
செவ்வாய் தசையில் புதன் புத்தி நடப்பவர்கள்:
“சூரிய காயத்ரி”- ஜபித்து வரவும்.
செவ்வாய் தசையில் கேது புத்தி நடப்பவர்கள்:
காளபைரவரை செவ்வாய் தோறும் வணங்கி வரவும்.
செவ்வாய் தசையில் சுக்கிரன் புத்தி நடப்பவர்கள்:
வரலட்சுமி பூஜை செய்து வரவும்.
செவ்வாய் தசையில் சூரியன் புத்தி நடப்பவர்கள்:
கோ பூஜை வெள்ளி தோறும் செய்து வரவும்.
செவ்வாய் தசையில் சந்திரன் புத்தி நடப்பவர்கள்:
அஷ்டலட்சுமிகளை வணங்கி வரவும்.

பரிகாரம்

தோஷம் உள்ளவர்கள் ஜோதிடரிம் ஜாதகத்தைக் காண்பித்து, உரிய பரிகாரங்களைச் செய்து பார்த்த பிறகும் பலன் கிடைக்காமல் போகலாம். சிலர் ” நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன” என்று கூறுவார்கள். சிலபேர், ‘நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள்.

பரிகாரம் செய்யும் இடங்கள்

இதற்கு பரிகாரத்தை தவறாக செய்வது கூட காரணமாக இருக்கலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. !

சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

பரிகாரம் செய்யும் கிழமை

செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

பரிகாரம் செய்யக்கூடாத கிழமை

ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் முதல் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

இதை பின்பற்றினால் பரிகாரம் நல்ல பலனளிக்கும்.

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply